Thursday 22 March 2012

சத்தான உணவு செய்முறை


பருப்பு அடை
தேவை
பச்சைப்பயறு    -1கப்
துவரம் பருப்பு-1கப்
உளுத்தம் பருப்பு-1கப்
பெருங்காயம்-சிறிது
தேங்காய் எண்ணெய்-1கப்
பச்சை மிளகாய்-4
கொத்துமல்லி இலை-1/2கொத்து
உப்பு-ருசிக்குத் தக்க அளவு
செய்முறை
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் விட்டு இவற்றை அரைத்தெடுக்கவும். கொத்துமல்லி இலை, மிளகாய் இவற்றைச் சிறு துண்டங்களாக நறுக்கி, உப்பும் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். கலந்த மாவானது இட்லி மாவைப் போன்று இருக்கும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி மாவை விடவும். ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி எடுக்கவும். இதை சட்னி இல்லாமலேயே சாப்பிடலாம்.
ராகி ரொட்டி
தேவை
ராகி மாவு-4கப்
உப்பு-11/2தேக்கரண்டி
எண்ணெய்- 1மேஜைக்கரண்டி
செய்முறை
உப்பு, எண்ணெய், வெந்நீர் ஆகியவற்றை ராகி மாவில் விட்டுப் பிசையவும், இதில் ஒரு பகுதியை எடுத்து, வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை அதில் பரவலாகத் தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, பரவலாகத் தட்டிய ரொட்டியை அதில் இட்டு வேக வைக்கவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
ராகி கஞ்சி

தேவை
ராகி மாவு-1மேஜைக்கரண்டி
பால்-2கோப்பை
சர்க்கரை-4தேக்கரண்டி
தண்ணீர்-2கப்
செய்முறை
தண்ணீரையும் பாலையும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். ராகி மாவைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். நன்றாக வேகவைத்து, பிறகு ருசிக்குத் தகுந்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பிஸி பேளே பாத்
தேவை
அரிசி-2கப்
துவரம் பருப்பு-1/2கப்
பச்சை கடலை பருப்பு-21/2தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
வெந்தயம்-1/4தேக்கரண்டி
பட்டை-1துண்டு
கிராம்பு-2-3
கொத்துமல்லி விதை    -2தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-6-8
எண்ணெய்-2தேக்கரண்டி
பெருங்காயம்-    1துண்டு
தேங்காய் துருவல்-3/4தேக்கரண்டி
புளி-ஒருஎலுமிச்சைஅளவு
கடுகு-3/4தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1/4தேக்கரண்டி
பீன்ஸ்-1/2கிலோ
உருளைக்கிழங்கு-2
உப்பு-3தேக்கரண்டி
மசாலாப் பொடி
பச்சைக் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பட்டை, கிராம்பு, கொத்துமல்லி விதை, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்தெடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் இவற்றையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
செய்முறை
துவரம் பருப்பை, வேண்டிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் காய்கறிகளையும், பாதியளவு மசாலாவும், உப்பு, கரைத்த புளிநீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். காய்கள் பாதி வெந்தவுடன் அரிசியையும் சேர்த்து, வேக வைக்கவும். மீதியுள்ள மசாலாவையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் கடுகு சேர்த்துத் தாளித்தெடுக்கவும்.
வெல்லத் தோசை
தேவை
அரிசி மாவு-1கப்
கோதுமை மாவு-1மேஜைக்கரண்டி
வெல்லம்-3அவுன்ஸ்
தண்ணீர்-1/2கப்
ஏலக்காய்-2
கிராம்பு-2
தேங்காய் துருவல்-2மேஜைக்கரண்டி
எண்ணெய்-11/2மேஜைக்கரண்டி
செய்முறை
வெல்லத்தை தண்ணீரில் கரைக்கவும். இதில் அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய் துருவல், பொடி செய்த ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். இதனை தோசை வார்க்க ஏற்றவாறு மாவாக்கிக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு கரண்டி நிறைய மாவை எடுத்து அதனை தோசைக் கல்லில் வார்க்கவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
காய்கறி, சோள பராத்தா
தேவை
சோள மாவு-    21/4கப்
பசலைக்கீரை    -1சிறியது
காலிபிளவர்-1சிறியது
எண்ணெய்-2மேஜைக்கரண்டி
உப்பு-1தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி-1தேக்கரண்டி
செய்முறை
காலி பிளவர், பசலைக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது தண்ணீர் விட்டு இவற்றை வேக வைக்கவும். உப்பு, மிளகாய் பொடி, எண்ணெய் இவற்றுடன் வெந்த காய்கறியை மசித்து சோள மாவுடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி தண்ணீர் விட்டு நல்ல மாவாக பிசைந்தெடுக்கவும். இந்த மாவில் பராத்தாக்களைச் செய்யவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து பராத்தாக்களை வெந்தெடுக்கவும்.
கோதுமை உப்புமா
தேவை
கோதுமை சூஜி (ரவை)-1கப்
மஞ்சள் பொடி-ஒரு துளி
எண்ணெய்-4தேக்கரண்டி
உப்பு-1தேக்கரண்டி
பச்சை கடலைப்பருப்பு-1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3-4
இஞ்சி-ஒரு துண்டு
கடுகு-11/4தேக்கரண்டி
வெங்காயம்-1சிறியது
பெருங்காயம்-    ஒருதுண்டு
கறிவேப்பிலை-சிறிய அளவு
செய்முறை
எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு சூடாக்கவும். இதில் கடுகு, பச்சை கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயம் இவற்றை போட்டு வறுத்தெடுக்கவும் இதில் 11/2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூஜியை அதில் சேர்க்கவும் கட்டிகள் ஏற்படாவண்ணம் நன்றாகக் கலக்கிக் கொண்டேயிருக்கவும். கறிவேப்பிலையையும் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பல சத்துணவுப் பாயசம்
தேவை
உலர்ந்த பால் பவுடர்    -30கிராம்
பல சத்துணவு பொடி-30கிராம்
வெல்லம்-38கிராம்
செய்முறை
பால்பவுடரையும், சத்துணவுப் பொடியையும் கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டுப் பிசையவும். வேண்டிய அளவு தண்ணீர்விட்டுக் கலக்கிக் கொள்ளவும். வெல்லத்தையும் கலந்து, 5 நிமிஷங்கள் கொதிக்க வைக்கவும்.
சூடான வெண் பொங்கல்
தேவை
பச்சரிசி-6அவுன்ஸ்
கடலைப்பருப்பு-2அவுன்ஸ்
பல சத்துணவு-2அவுன்ஸ்
தாவர எண்ணெய்-2மேஜைக்கரண்டி
மிளகுப்பொடி-1மேஜைக்கரண்டி
உப்பு-1மேஜைக்கரண்டி
இஞ்சி-1துண்டு
முந்திரி பருப்பு-1அவுன்ஸ்
நெய்-1மேஜைக்கரண்டி
அரிசிக்குப் பதிலாக கோதுமை, ராகி, சோளம் ஆகியவற்றையும் உபயோகிக்கலாம்.
செய்முறை
சிறிதளவு தாவர எண்ணெய்யோடு சுத்தம் செய்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த அரிசியை அதனுடன் சேர்க்கவும். அரிசி பதமாகும் வரை சமைக்கவும். பின்னர் பல சத்துணவு, உப்பு, மிளகு, நறுக்கிய இஞ்சி முதலியவற்றைச் சேர்க்கவும். 10, 15 நிமிஷங்கள் நன்றாகக் கலக்கவும். வறுத்த முந்திரிப்பருப்பையும், நெய்யையும் சேர்க்கவும்.

No comments:

Post a Comment