Thursday 22 March 2012

சித்தரகசியம் - மூலிகை சாபநிவர்த்தி!


மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டுமாம்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் என்கின்றனர்.சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும்.

சாப நிவர்த்தி மந்திரங்களுக்கு பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.பெரும்பாலான மந்திரங்களை லட்சம் தடவை செபித்து உருவேற்றிட வேண்டும் என குறிப்புகள் கூறுகிறது.இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் இன்னமும் அறியப் படவில்லை.

நண்பரொருவர் செடிகளில் இருக்கும்,பூச்சிகள்,கிருமிகள் போன்றவற்றை அகற்றிட இம்மந்திரங்கள் உபயோகமாகலாம் என கூறியிருந்தார், இது குறித்து அறிந்தவர்கள் மேலதிக விவரம் கூறினால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.

இனி சில மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்களைப் பார்ப்போம்.


"ஆமென்ற வசியமென்று சொல்லக் கேளு
ஆஅதி முதலான கொடியறுகு வாங்க
டங் றீங் வங் யென்று லட்சம் செபித்தால்"

- அகத்தியர் -

கொடியறுகு வேரை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "டங் றீங் வங்" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.


"நாடவே பெருவாகை மூலிசாபம்
கெவனமுடன் ஓம் நமசிவய வென்று
தாளப்பா லட்சமுரு ஓதும் போது
மீளப்பா வசிய யோகம் தரணியில்"

- அகத்தியர் -

பெருவாகை மூலிகையை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "ஓம் நமசிவய" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சாபநிவர்த்தி மந்திரங்கள்


"பத்தியுடன் பாசாண சுண்ண செந்தூரம்
பாங்காகப் புடமிடும்முன் சாபங்கேளே
கேளப்பா பாசாண சாபந்தீரக்
கிருபையுடன் ஓம் ஹீம் நசிமசி யென்று
வாளப்பா ஆயிரத்தெட் டுருச்செபிக்க
வலியான பாசாண சாபந்தீரும்"

- அகத்தியர் -

பாசாண சுண்ண செந்தூரங்களை புடமிடும் முன் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொலும் அகதியர்.. மேலும் கிருபையுடன் "ஓம் ஹீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் வலிமை உள்ள பாசாணங்களின் சாபங்கள் தீரும் என்கிறார்.

"போமேதான் உபரசத்தின் சத்தைச்சேர்த்து
புகழான ரசவாதஞ் செய்யும் போது
ஆமேதான் ஓம் றீம் நசிமசி யென்று
அன்பாக ஆயிரத்தெட் டுருச்செபித்தால்
வாமேதான் உபரசத்தின் சாபம் போச்சு"

- அகத்தியர் -

உபரசத்தின் சத்துக்களைச் சேர்த்து புகழ்நிறைந்த் இரசவாதம் செய்யும் போது அன்பாக "ஓம் றீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் உபரசத்தின் சாபங்கள் நீங்கும் என்கிறார் அகதியர்.

இது வரை இந்த சித்த ரகசியம் தொடரில் சொன்ன மந்திரங்கள் வரிசையாக, உடல் சாப மந்திரங்கள், உடல் கட்டு மந்திரங்கள், தீட்சை மந்திரங்கள் என்ற படிமுறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அகத்தியர் வலியுறுத்துகிறார்.

குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு

உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள்.
உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இதை கண்டு கொள்ளமல் விடும் போது மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது.
அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கம் பிரச்னையை தீர்க்க  மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
குடல் இறக்கம் என்பது வயிற்றில் உள்ள குடல் சவ்வுப் படலம் சிறிய துவாரங்கள் வழியே வெளி வருதல் ஆகும். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் இயற்கையாக சில துவாரங்கள் உண்டு.
அவை தொப்புள், அடிவயிற்றில் இருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் பகுதி போன்றவை. இந்த துவாரங்கள் வயிற்றின் உள் பகுதியில் இருந்து மேல் வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய்ப்பகுதியில் எலாஸ்டிக் போன்று இருக்கும். இந்த எலாஸ்டிக் விரிவடைவதால் வயிற்றில் உள்ள குடல் மற்றும் குடல் சவ்வுப் படலம் போன்றவை வெளியில் வந்து விடுகிறது.
துவக்கத்தில் அழுத்தம் வரும் போது மட்டும் வெளியில் வந்து அழுத்தம் குறைந்த உடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். அவ்வப்போது இந்தப் பிரச்னை தோன்றும். பிறகு குடல் பகுதிகள் நிரந்தரமாகத் தங்கி தொல்லை தர ஆரம்பிக்கும்.
அதுமட்டுமில்லாமல் வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு தையல் விலகி ஓட்டைகள் ஏற்படலாம். இந்த துவாரங்களின் வழியே குடல் வெளியில் வந்து அப்படியே தங்கிவிடும். இதனையே குடல் இறக்கம் என்கிறோம்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பெண்களின் கர்ப்பகாலம், தொடர்ச்சியான மலச்சிக்கல், தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிப்படுபவர்கள், அதிக பாரம் தூக்குபவர்கள், வயிற்றில் அதிக அழுத்தம் கொடுப்பவர்கள், வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முறையான ஓய்வு எடுக்காதவர்கள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இவர்கள் குடல் இறக்கம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருப்பதுடன் பிரச்னையின் துவக்கத்திலேயே டாக்டரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம். குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.
பாதுகாப்பு முறை: குடல் இறக்கம் பிரச்னை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மாமிச உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
குடல் இறக்கப் பிரச்னையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும்.
அப்போது உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்னை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
குடல் இறக்கப் பிரச்னை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும். கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும்.
ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்னை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நரம்புத்தளர்ச்சி நீக்கும் மாதுளம் பூ?

*மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம்பூ.
இருமல் போக்கும்
*மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
தொண்டை ரணம்
*மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.
தாதுபலம்
*தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.
*மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.
ரத்த மூலம் குணமாக
*மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
*ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

தலைவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணியை தேடுவோருக்கு விரைவில் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்கிறது ஒரு ஆய்வு.
“மாக்யுலர் டீஜெனரேஷன்” எனப்படும் இந்த பாதிப்பால் பார்வை குறைபாடு படிப்படியாக அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக இந்த பாதிப்பு வயதானவர்களை அதிகம் தாக்கும். ஆனால், ஆஸ்பிரின் அடிக்கடி எடுத்துக் கொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய சேர்ந்த கண் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு கண் பரிசோதனை செய்வதும் அவசியம் என்கின்றனர்.

மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!

‘மழை காலங்களில் சிறந்த உணவு எது?’னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ…
 
* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் ‘சி’ சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

விட்டமின் ‘டி’ குறைவால் உண்டாகும் விளைவுகள்:

பல்வேறு வைட்டமின்களின் உதவியால்தான் நம் உடல் எந்த வித நோயுமின்றி இயங்குகிறது. அதே போல் தான் விட்டமின் ‘டி’ நம் உடல்நலத்தை காக்க அவசியமான ஒன்றாக இருக்கிறது. அத்தகைய விட்டமின் ‘டி’ நம் உடலில் இருந்து குறைந்தால் பல வகையான நோய்கள் ஏற்படுகிறது.
விட்டமின் ‘டி’ குறைவதற்கான காரணங்கள்:

[ad] Empty ad slot (#4)!
* உணவு கட்டுப்பாட்டினால் சரியாக உணவை உட்கொள்ளாததால் விட்டமின் டி குறைவு ஏற்படுகிறது. * சூரிய ஒளி நமது உடலின் மேல் படாமல் இருத்தல்.
* குடலில் இருந்து வைட்டமின் ‘டி’யை உறிஞ்சும் தன்மை குறைவாக இருத்தல்.
* சிறுநீரக மற்றும் கல்லீரல் கோளாறுகள் மூலம் வைட்டமின் ‘டி’ உடலுக்கு கிடைக்கால் போதல்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விட்டமின் ‘டி’ குறைபாடு உண்டாகிறது. தாய்ப்பாலில் விட்டமின் ‘டி’ குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் சூரிய ஒளி படுவதனை தவிர்க்கின்றனர். பெரியவர்களும் பெரும்பாலும் சூரிய ஒளியிலிருந்து விலகியே இருக்கின்றனர். இதனால் எலும்பு தொடர்பான ‘ரிக்கெட்ஸ்’ போன்ற நோய்கள் உண்டாகின்றன.  எனவே, கால்சியம் அடங்கிய உணவுப்பொருட்களை உண்பதன் மூலமும், சூரிய ஒளி உடலில் படுவதன் மூலமும் விட்டம்ன் ‘டி’ குறைப்பாட்டை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

Top 10 Foods Highest in Vitamin D

#1: Cod Liver Oil
Cod liver oil has been a popular supplement for many years and naturally contains very high levels of vitamin A and vitamin D. Cod liver oil provides 10001IU (1667% RDA) per 100 gram serving, or 1360IU (340% RDA) in a single tablespoon.


#2: Fish
Various types of fish are high in vitamin D. Typically raw fish contains more vitamin D than cooked, and fatty cuts will contain more than lean cuts. Further, fish canned in oil will have more vitamin D than those canned in water. Raw fish is typically eaten in the form of sushi. Raw Atlantic Herring provides the most vitamin D with 1628IU (1667% RDA) per 100 gram serving, 2996IU (499% RDA) per fillet, and 456IU (76% RDA) per ounce. It is followed by Pickled Herring with 680IU (113% RDA) per 100g serving, Canned Salmon (127% RDA), Raw Mackerel (60% RDA), Oil Packed Sardines (45% RDA), Canned Mackerel (42% RDA), and oil packed Tuna (39% RDA).
#3: Fortified Cereals
A breakfast staple in the Americas, most commercial cereals are fortified with the essential vitamins and nutrients. Exercise caution and check food labels when purchasing cereals, be sure to pick products that have little or no refined sugars, and no partially hydrogenated oils! Fortified cereals can provide up to 342IU (57% RDA) per 100 gram serving (~2 cups), and even more if combined with fortified dairy products or fortified soy milk. Products vary widely so be sure to check the nutrition label before buying.

#4: Oysters
In addition to vitamin D, Oysters are a great source of vitamin b12, zinc, iron, manganese, selenium, and copper. Oysters are also high in cholesterol and should be eaten in moderation by people at risk of heart disease or stroke. Raw wild caught Eastern Oysters provide 320IU (80% RDA) per 100 gram serving, 269IU (67% RDA) in six medium oysters.

#5: Caviar (Black and Red)
Caviar is a common ingredient in sushi and more affordable than people think. Caviar provides 232IU (58% RDA) of vitamin D per 100 gram serving, or 37.1IU (9% RDA) per teaspoon.
#6: Fortified Soy Products (Tofu and Soy Milk)
Fortified soy products are often fortified with both vitamin D and calcium. Fortified Tofu can provide up to 157IU (39% RDA) of vitamin D per 100 gram serving, or 44IU (11% RDA) per ounce. Fortified Soy Milk can provide up to 49IU (12% RDA) of vitamin D per 100 gram serving, 119IU (30% RDA) per cup. Amounts of vitamin D vary widely between products, so be sure to check nutrition facts for vitamin D content.

#7: Salami, Ham, and Sausages
Salami, Ham, and Sausages are a good source of vitamin b12, and copper. Unfortunately, they are also high in cholesterol and sodium, and so should be limited by people at risk of hypertension, heart attack, and stroke. Salami provides 62.0IU (16% RDA) of vitamin D per 100 gram serving, or 16.7IU (4% RDA) per ounce (3 slices). It is followed by Bologna Pork 56IU (9% RDA) per 100 grams, and Bratwurst 44IU (7% RDA) per 100 gram serving.

#8: Fortified Dairy Products
Dairy products are already high in calcium, so it makes sense to fortify them with vitamin D. Milk can provide up to 52.0IU (13% RDA) of vitamin D per 100 gram serving, 127IU (32% RDA) per cup. Cheese can provide up to 6.6IU (2% RDA) in a cubic inch, and butter provides 7.8IU (2% RDA) in a single tablespoon. Check nutrition labels for exact amounts.

#9: Eggs
In addition to vitamin D, eggs are a good source of vitamin B12, and protein. Eggs provide 37.0IU (9% RDA) of vitamin D per 100 gram serving, or 17.0IU (4% RDA) in a large fried egg.
[ad] Empty ad slot (#4)!
#10: Mushrooms
More than just a high vitamin D food, mushrooms also provide Vitamin B5 (Pantothenic Acid) and copper. Lightly cooked white button mushrooms provide the most vitamin D with 27.0IU (7% RDA) per 100 gram serving, or 7.6IU (2% RDA) per ounce.

நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன.
ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது.
இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.